கிழக்கு மாகாணம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் இருவர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலையில் இதுவரை ஒரு நோயாளிக்கும் இரு வைத்தியர்கள் இரு தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஜவருக்கு கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
இதேவேளை கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சம்மாந்துறை தொற்றாளர் ஒருவரே கடந்த நாளில் உயிரிழந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், அம்பாறை